சனி, 13 அக்டோபர், 2012

துபாயில் நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 
TNTJ இராமநாதபுரம் மாவட்ட துபாய் மற்றும் ஷார்ஜாமண்டலங்களின் ஆலோசனைகூட்டம் 12/10/12 அன்று TNTJதுபாய் ஹோர் அல் அன்ஸ் மர்கஸில் வைத்து துபாய் மண்டலசெயலாளர் சகோதரர் அஸ்ரப் அலி அவர்கள் முன்னிலையில் TNTJ இராமநாதபுரம் மாவட்ட பொருப்பாளர்தலமையில் நடைபெற்றது.

அதில் மாவட்ட தாயிக்கான சம்பளம்சந்தா சீரமைப்புஆகியவற்றை விரிவாக ஆலோசிக்கப்பட்டதுசந்தா வசூல் செய்ய பகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கப் பட்டுள்ளது.

TNTJ மாநில தலைமை கட்டிட நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலங்களின் TNTJ இராமநாதபுரம் கூட்டமைப்பு சார்பில் தேவையான ஒத்துழைப்பு வழங்குவது எனவும் பொருளாதாரத்தை முடிந்தவரை திறட்டி உதவுவது எனவும் தீர்மாணிக்கப்பட்டது.



அதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 17 செப்டம்பர், 2012

நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து படம் எடுத்த அயோக்கியர்களை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்!


முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக இராமநாதபுரம் நகரில் இராமேஸ்வரம் சாலையில் அமைந்துள்ள அரசு பேருந்து பணிமைனயின் முன்பாக 15.09.2012 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு போரட்டம் துவங்கயது. தங்களது நபிகளாரை இழிவாக சித்தரித்து திரைப்படம் எடுத்ததைப் பொருக்க முடியாத முஸ்லிம்கள் குறிப்பிட்ட நேரத்தற்கு முன்பாகவே குழுமினார்கள்.
போராட்டத்தை மாவட்டத தலைவர் சைபுல்லாகான அவர்கள் துவக்கிவைக்க மக்களது கோசம் வீரமாகவும் ஆக்ரோசத்துடனும் வீரியமாக கூடியிருந்த மக்களை உற்சாகப்படுத்தி தங்களது கைகளை உயர்த்து ஆவேசக் கோசம் போடவைத்தது. மக்கள் வெள்ளம் கூடிக்கொண்டே இருப்பதை அறிந்த காவலதுறையினர் நூற்றுக்கனக்கான காவலர்களைக் கொண்டு வந்து குவிக்க ஆரம்பித்தார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழப்போக்கர்களுக்கும், சாலை விதிகளுக்கும், சாலையில் கடைவைத்துள்ளவர்களுக்கும் எந்த வித இடையுறும் இன்றியே தங்களது போராட்டங்களை அமைத்துக் கொள்வதால், கவலர்களுக்கு பொறுப்பு குறைந்து வேடிக்கை பார்த்தார்கள்.
புகழ் அனைத்தும் இறைவனுக்கே! இதுவரை இராமநாதபுரம நகர் காணத அளவிற்கு மக்கள் கூட்டம் நிறம்பி வழிந்தது. ஆளும் கட்சி எதிர்கட்சிகள் கூட இந்த அளவிற்கு மக்களைத் தரிட்டியது கிடையாது என்று கூடியிருந்த மக்கள் கூறியது நம்மை இன்னும் உற்சாகப்படுத்தியது.
11.45 மணக்கு மாநில் செயலாளர் கோவை அப்துர்ரஹிம் அவர்கள் கண்டன உரையினைத் தொடங்கினார்க்ள்.இந்த திரைப்படம் எடுத்தவன் சித்தரித்த விதம் எந்த அளவிற்கு முஸ்லிம்களைப் பாதித்துள்ளது, இவனின் நோக்கம் என்ன? இதற்கு அமெரிக்க அரசு துணைபோவது ஏன்? என்பன போன்றவைகளை விளக்கி உரையாற்றினார்கள். கண்டனை உரையின் வீரியத்திற்கு ஏற்ப மக்கள் அல்லாஹ் அக்பர் என்று கோசமிட்டு ஆமோதித்தார்க்ள.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

ஷைஃபுதீன் ரஷாதியுடன் மரைக்காயர் பட்டிணத்தில் விவாத ஒப்பந்தம் - பீஜே கலந்துகொண்டார்

மரைக்காயர்பட்டிணம், ஆகஸ்ட் 26: ஷைஃபுத்தீன் ரஷாதியுடன் (26.8.2012) இன்று விவாத ஒப்பந்தம் நடைப்பெற்றது. விவாத ஒப்பந்தத்தில் பி.ஜே . அவர்கள் கலந்து கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

thanks to www.tntjpno.com

புதன், 22 ஆகஸ்ட், 2012

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாக மாற்றம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நேற்று தொண்டியில் மாவட்ட பொதுக்குழு தலைவர் சகோதரர் பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள், கிளை மற்றும் முன்னால் நிர்வாகிகள் களந்துகொண்டனர்.



அதில் பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் தற்போதைய நிலை மற்றும் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின் நிர்வாக மறு சீரமைப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தலைவராக முன்னால் தலைவர் சகோதரர் மேலக்கோட்டை சைபுல்லா அவர்களும்
துணைத் தலைவராக சகோதரர் பரமக்குடி சுலைமான் அவர்களும்
செயலாளராக சகோதரர் தொண்டி சிராஜ் அவர்களும்
துணைச் செயலாளராக சகோதரர் வெளிப்பட்டிணம் ஜஹாங்கீர் அவர்களும்
சகோ. அஹ்மத் முஸ்தபா (காதரியா உச்சிப்புளி)
சகோ. ஜின்னாஹ் (பெரியபட்டிணம்)
பொருளாளராக சகோதரர் இராமநாதபுரம் சித்தீக் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பகுதிவாரியாக கூடுதலாக 4 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பரமக்குடி, இராமநாதபுரம், முதுகுளத்தூர் மற்றும் திருவாடான பகுதிகளுக்கு அவர்கள் முறையே செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்....

புதன், 18 ஜூலை, 2012

முன்னால் தமுமுக நிர்வாகிகளால் நிறைந்திருந்த TNTJ இராமநாதபுரம் மர்கஸ்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

கடந்த சில நாட்களுக்கு முன் தமுமுக இராமநாதபுரம் மாவட்ட முன்னால் தலைவர் தமது ஆதரவாளர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்த செய்தி பெரும்பாலான மக்காளல் நம்பமுடியாத செய்தியாக இருந்தது. தமுமுகவின் தற்போதைய போக்கு இஸ்லாமிய நெறிமுறைகளை விட்டு ஒதுங்கி விட்டதாகவும், தாம் முழுமையான ஏகத்துவ கொள்கைவாதியாக இருக்க தவ்ஹீத் ஜமாஅத்தே சரியான இயக்கம் என்றும் தெறிவித்தது குறிப்பிடத்தக்கது. அன்று நடந்த கூட்டத்தில் ஏராளமான முன்னால் தமுமுக நிர்வாகிகள் களந்துகொண்டனர்.

புகைப்படத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிலிக் செய்யவும்