சனி, 18 பிப்ரவரி, 2012

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இராமனாதபுரம் மாவட்ட துபாய் மற்றும் ஷார்ஜா ஒருகிணைத்த கூட்டம் 17 /02 /2012 அன்று வெள்ளிகிழமை அசர் தொழுகைக்கு பிறகு துபாய் மண்டல மக்கள் தொடர்புச் செயலாளர் சகோதரர் அஸ்ரப் நூஹு அவர்கள் தலைமையில் ஹோர் அல் அன்ஸ் மர்கசில் நடைபெற்றது




இதில் விவாதிக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு

1. கடந்த ஜனவரி மாவட்ட செயல்பாடுகள் வாசிக்கப்பட்டது
2. பிப் 14 மாவட்ட செயல்பாடுகள் மற்றும் மக்கள் திரளாக களந்து கொண்டது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது மேலும் மாவட்டத்தில் பிப் 14 போராட்டத்திற்காக வந்த வரவு மற்றும் செலவுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 
3. சந்தாக்களை முறையாக வசூலிக்க சகோதரர் ஹபீப் அவர்களை பொருப்பாளராக நியமிப்பது என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
4. எதிர்கால திட்டமாக மாவட்ட வேண்டுகோளுக்கினங்க இன்னும் 6 மாதத்திற்கு தொடர்ந்து மாவட்ட தாயிக்கான சம்பளத்தை அனுப்பவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள தீர்மாணிக்கப்பட்டுள்ளது 

அல்ஹம்துலில்லாஹ்........

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

இராமநாதபுரத்தை உளுக்கிய பிப் 14 தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இடஒதுக்கீட்டுப் போரட்டம் இராநாதபுரத்தையே உளுக்கியது....

மத்திய மாநில அரசுகள் முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்ற இப் போரட்டத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் எழுச்சியுடன் கலந்துகொண்டனர். சகோதரர் மேலாண்மைக் குழு உறுப்பினர் அப்துந் நாசர் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் இந்தப் போரட்டம் வெற்றியடைய பிரார்திக்குமாறு கோட்டுக்கொள்கிறோம்.