புதன், 18 ஜூலை, 2012

முன்னால் தமுமுக நிர்வாகிகளால் நிறைந்திருந்த TNTJ இராமநாதபுரம் மர்கஸ்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

கடந்த சில நாட்களுக்கு முன் தமுமுக இராமநாதபுரம் மாவட்ட முன்னால் தலைவர் தமது ஆதரவாளர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்த செய்தி பெரும்பாலான மக்காளல் நம்பமுடியாத செய்தியாக இருந்தது. தமுமுகவின் தற்போதைய போக்கு இஸ்லாமிய நெறிமுறைகளை விட்டு ஒதுங்கி விட்டதாகவும், தாம் முழுமையான ஏகத்துவ கொள்கைவாதியாக இருக்க தவ்ஹீத் ஜமாஅத்தே சரியான இயக்கம் என்றும் தெறிவித்தது குறிப்பிடத்தக்கது. அன்று நடந்த கூட்டத்தில் ஏராளமான முன்னால் தமுமுக நிர்வாகிகள் களந்துகொண்டனர்.

புகைப்படத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிலிக் செய்யவும்



ஞாயிறு, 15 ஜூலை, 2012

தமுமுகவின் முன்னால் மாவட்ட தலைவர் சகோ. சலீமுல்லா கான் அவர்கள் TNTJ வில் இணைந்தார்

கண்ணியமும் பாக்கியமும் பொருந்திய அல்லாஹ் சுப்ஹானஹீத்தாலாவின் திருப்பெயரால்....

தமுமுகவின் முன்னால் இராமநாதபுரம் மாவட்டத் தலைவராக இருந்த சகோதரர் சலீமுல்லா கான் அவர்கள் தமது ஆதரவாளர்களுடன் நேற்று TNTJ மாநிலச் செயலாளர்கள் சகோதரர் யூசுப் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலையில் இணைந்தார்.

இது பற்றிய மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வரும் செய்தி, கடந்த சில நாட்களாகவே இந்த முடிவு குறித்து அவர் மாநிலத் தலைவர் சகோதரர்  பீஜே அவர்களிடம் நேரடியாகப் பேசியதாகவும், தமுமுக வினருக்குக் கூட இது பற்றி அவர் தெரிவித்ததாகவும் தெறிகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன் அவர் வகித்து வந்த மமகவின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிப்பும் செய்துள்ளனர் மமக நிர்வாகிகள்.


எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம் அவன் நாடியோருக்கு நேர்வழிகாட்டுகிறான்.