ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

ஷைஃபுதீன் ரஷாதியுடன் மரைக்காயர் பட்டிணத்தில் விவாத ஒப்பந்தம் - பீஜே கலந்துகொண்டார்

மரைக்காயர்பட்டிணம், ஆகஸ்ட் 26: ஷைஃபுத்தீன் ரஷாதியுடன் (26.8.2012) இன்று விவாத ஒப்பந்தம் நடைப்பெற்றது. விவாத ஒப்பந்தத்தில் பி.ஜே . அவர்கள் கலந்து கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

thanks to www.tntjpno.com

புதன், 22 ஆகஸ்ட், 2012

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாக மாற்றம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நேற்று தொண்டியில் மாவட்ட பொதுக்குழு தலைவர் சகோதரர் பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள், கிளை மற்றும் முன்னால் நிர்வாகிகள் களந்துகொண்டனர்.



அதில் பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் தற்போதைய நிலை மற்றும் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின் நிர்வாக மறு சீரமைப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தலைவராக முன்னால் தலைவர் சகோதரர் மேலக்கோட்டை சைபுல்லா அவர்களும்
துணைத் தலைவராக சகோதரர் பரமக்குடி சுலைமான் அவர்களும்
செயலாளராக சகோதரர் தொண்டி சிராஜ் அவர்களும்
துணைச் செயலாளராக சகோதரர் வெளிப்பட்டிணம் ஜஹாங்கீர் அவர்களும்
சகோ. அஹ்மத் முஸ்தபா (காதரியா உச்சிப்புளி)
சகோ. ஜின்னாஹ் (பெரியபட்டிணம்)
பொருளாளராக சகோதரர் இராமநாதபுரம் சித்தீக் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பகுதிவாரியாக கூடுதலாக 4 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பரமக்குடி, இராமநாதபுரம், முதுகுளத்தூர் மற்றும் திருவாடான பகுதிகளுக்கு அவர்கள் முறையே செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்....